search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா முதல்வர்"

    கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்திருந்தார்.
    புது தில்லி

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில்  மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கடந்த மாதம், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா,  கொரோனா தொற்று  முடிவுக்கு வந்த பின்  குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.  

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என்று உறுதிபட கூறினார்.  

    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, அது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினையில் கேரள அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.


    இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralacM #PinarayiVijayan #Google
    புதுடெல்லி:

    சர்வதேச அளவில் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள கூகுள் இணைய தளத்தைத்தான் அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

    இதற்காக கூகுள் இணைய தளம் புதுப்புது தகவல்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மோசமான மாநில முதல்வர் யார்? என்று தேடினால் அதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பெயர் வருகிறது.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதற்கு அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கேரளாவில் வன்முறை, கலவரங்கள் நடக்கிறது. இதனை சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் விமர்சித்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவின் மோசமான முதல்வர் என பினராயி விஜயனின் பெயர் கூகுள் இணைய தளத்தில் வெளியாகி இருப்பது கேரள அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    இதற்கு எதிர்கட்சிகளின் சதியே காரணம் என்றும், பினராயி விஜயனின் நற்பெயரை சீர் குலைக்க செய்யப்படும் திட்டமிட்ட செயல் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    கூகுள் இணையதளம் பினராயி விஜயனின் பெயரை மோசமான முதல்வர் என்று குறிப்பிட்டு இருப்பது இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கூகுள் இணையதளம் சர்ச்சையில் சிக்குவது இதற்கு முன்பும் பல முறை நடந்து உள்ளது. கூகுளில் முட்டாள் யார்? என தேடினால் அதில் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் வந்தது. இது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக கூகுளின் முதன்மை அதிகாரியை அமெரிக்க பாராளுமன்றம் நேரில் அழைத்து விசாரணை நடத்தியது.

    இது போல உலகின் டாப் 10 கிரிமினல்கள் யார்? என தேடினால் அதில் தாவூத்இப்ராகிம், கடாபி ஆகியோருடன் இந்திய பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றது. இதுவும் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #KeralacM #PinarayiVijayan #Google
    ×